Monday, October 12, 2009

ஒளிநாள்

ஒளிநாளாம்-தீப
திருநாளாம்!
ஐப்பசித்திங்கள்
கார்மதியன்று வரும்
தீபாவளிப் பெருநாளாம்!

ஆனந்தமே
ஆசையென்றால்
அறிவிலா கதையின்
அவசியமென்ன!

வளியே வலியரியும்
மாசிருக்கையில்
வெடிவெடித்து
மாசு சேர்ப்பதென்ன!

ஏனிந்த ஆட்டமென
அறியாத மூடராகி
ஆனந்த வெள்ளத்தில்
மூழ்கி திளைப்பதென்ன!

மனக்களிப்பென்றால்
வாழ்த்துகள்!
மதக்களிப்பென்றால்
நீர் மானுடபிறவியா!

No comments:

Post a Comment