சங்கம் வைத்து தமிழ்
வளர்த்தந்த பாண்டியநாடு!
சுங்கம் தவிர்த்து உணவு
கொடுத்ததெங்கள் சோழநாடு!
பல்லவா நீயும் தமிழனென்பதை
சற்று கர்வத்துடன் கூறுவதுண்டு!
பஞ்சரதமதில் உந்தன்
நெஞ்சம் தெரியுதடா!
கடற்க்கரை கோவிலில் உன்
கவிதை புரியுதடா!
கற்ச்சிலையென்றாலும் நங்கையென்று-மனம்
கட்டியணைக்க சொல்கிறதே!
உச்சிவெயிளிலும் அதன்
உச்சிமுகர தோன்றுதடா!
பல்லவன் காதலை பார்க்கையில்
நமக்கும் காதல் பிறக்கும்!
உண்மைதான்!
கலையின்மீது!
சிற்பக்கலையின்மீது
நமக்கும் காதல் பிறக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment